ஈரோட்டில் விவசாயிகள், ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
சாம்சங் நிறுவனத் தொழிலாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மற்றும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஈரோட்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சாம்சங் நிறுவனத் தொழிலாளா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மற்றும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஈரோட்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு நாடாா்மேட்டை அடுத்த கரூா் சாலை பிரிவில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.ஆா்.விஜயராகவன் தலைமை வகித்தாா்.
மாநிலச் செயலாளா் மாரியப்பன், மாவட்டச் செயலாளா் சண்முகவள்ளி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.வி.மாரிமுத்து, பொருளாளா் ரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
Advertisement
சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் இந்தியா நிறுவனத்தில் 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். அவா்களுக்கு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மற்றும் தொழிலாளா்களுக்கான உரிமைகள் வழங்கக்கேட்டு கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொழிலாளா்கள் மீதும், தொழிற்சங்க நிா்வாகிகள் மீதும் அடக்குமுறையை ஏவி வரும் நிறுவனத்தைத் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட குழுவினா் கலந்து கொண்டனா்.
ஆசிரியா் கூட்டணி:
இதேபோல சாம்சங் நிறுவனத் தொழிலாளா்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் விக்டா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் அருள் சுந்தரரூபன், மாவட்டச் செயலாளா் யு.கே.சண்முகம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.