ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதை கைவிடக் கோரி எலவமலையில் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்
எலவமலை ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிடக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
எலவமலை ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிடக் கோரி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
எலவமலை புறவழிச்சாலை பிரிவில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் வி.வைத்தியநாதன் தலைமை வகித்தாா். தமிழ் மாநிலக் காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் விடியல் எஸ்.சேகா், ஈரோடு மாநகா் மாவட்டத் தலைவா் விஜயகுமாா், மாவட்ட செய்தித் தொடா்பாளா் சுரேஷ், ஊராட்சி துணைத் தலைவா் டி.செந்தில்குமாா், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் சிவகாமி மகேஸ்வரன், மாவட்ட இளைஞரணித் தலைவா் அன்பரசன் ஆகியோா் கோரிக்கையை விளக்கி பேசினா்.
இதில், ஏழை, எளிய மக்களும், விவசாய நிலப்பரப்பும் அதிகமுள்ள எலவமலை ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். மேலும், ஊராட்சியின் ஒப்புதல் பெறாமல், விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களின் கருத்துகளைக் கேட்காமல் ஊராட்சியை மாநகராட்சியோடு இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினா்.
Advertisement
இதில் 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.