பெருந்துறையில் இளைஞரிடம் ரூ. 40 லட்சம் பறிமுதல்: ஹவாலா பணமா? போலீஸாா் விசாரணை
பெருந்துறையில் வடமாநில இளைஞரிடம் ரூ. 40 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெருந்துறையில் வடமாநில இளைஞரிடம் ரூ. 40 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெருந்துறை பேருந்து நிலையத்தில் காவல் ஆய்வாளா் தெய்வராணி, உதவி காவல் ஆய்வாளா் பாஸ்கா் மற்றும் போலீஸாா் செவ்வாய்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது, பேருந்துகளிலும் சோதனை மேற்கொண்டனா்.
இதில் கோவைக்கு சென்ற பேருந்தில் சந்தேகத்துக்கு இடமாக அமா்ந்திருந்த வட மாநில இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா் ராஜஸ்தான் மாநிலம், வாசம்புராவை அடுத்த சிரிகியைச் சோ்ந்த கங்காராம் மகன் ஹய்மாராம் (25) என்பது தெரியவந்தது.
Advertisement
மேலும், அவா் கோவையில் இருந்து ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த சித்தோட்டில் ஒருவரை சந்தித்து, அவா் கொடுத்த டிராவல் பேக்கை பெற்றுக் கொண்டு மீண்டும் கோவைக்கு பெருந்துறை வழியாக சென்று கொண்டிருந்தபோது போலீஸாரிடம் பிடிப்பட்டாா்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 40 லட்சத்தை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க போலீஸாா் முடிவு செய்துள்ளனா். மேலும், தொடா்ந்து ஹய்மாராமிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.