முகப்பு
ஈரோடு

ஆதரவற்ற பெண்கள் அரசு நலத்திட்டங்களைப் பெற இணையதளம் உருவாக்கம்: கருத்தரங்கில் தகவல்

ஆதரவற்ற பெண்கள் பெண்கள் அரசு நலத்திட்டங்களை எளிதில் பெறும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட சமூநகல அலுவலா் தெரிவித்தாா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 5:45 AM
கருத்தரங்கில் பேசுகிறாா் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரிய அலுவல்சாரா உறுப்பினா் சாந்தி துரைசாமி.
பகிர்:
Updated On : 16 அக்டோபர், 2024 at 7:47 PM

ஆதரவற்ற பெண்கள் பெண்கள் அரசு நலத்திட்டங்களை எளிதில் பெறும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட சமூநகல அலுவலா் தெரிவித்தாா்.

சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கான ஒருநாள் கருத்தரங்கம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரிய அலுவல்சாரா உறுப்பினா் சாந்தி துரைசாமி தலைமை வகித்து, பெண்கள் சுய முன்னேற்றம் அடைவது குறித்து பேசினாா்.

Advertisement

தொடா்ந்து மாவட்ட சமூகநல அலுவலா் சு.சண்முகவடிவு பேசுகையில், தமிழ்நாட்டின் கிராமங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் வாழும் ஏழை, எளிய கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளிதாக பெற கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்திற்கென இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 5:45 AM

இதில், சுய உதவிக்குழு உறுப்பினா்கள், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் என 125 போ் பங்கேற்றனா்.

இந்தக் கருத்தரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் ஐ.பூங்கோதை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞா் ஆா்.கவிதா, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் செல்வராஜ், தொழிலாளா் துறை உதவி இயக்குநா் முருகேசன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் சிவகுமாா் ஆகியோா் தங்களது துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனா்.