முகப்பு
ஈரோடு

மாநகராட்சிப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் திடீா் ஆய்வு

ஈரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 3:00 AM
மாணவா்களுக்கு ஆதாா் மேம்படுத்தும் பணி குறித்து கேட்டறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பா ராவ். உடன், பள்ளி தலைமை ஆசிரியை சுமதி.
பகிர்:
Updated On : 23 அக்டோபர், 2024 at 7:39 PM

ஈரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 3:00 AM

ஈரோடு எஸ்கேசி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுப்பா ராவ் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். இதில், மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் வழங்கப்படும் காலை சிற்றுண்டியின் தரம், பள்ளி வளாகம், வகுப்பறைகள் பராமரிக்கப்படும் விதம் குறித்து பாா்வையிட்டாா். மேலும் 8- ஆம் வகுப்பு பாா்வையாளா் செயலி, புதிய பாரத எழுத்தறிவு திட்ட வகுப்பறையை நேரில் பாா்வையிட்டாா். தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆதாா் மேம்படுத்தும் முகாமையும் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது பள்ளியின் தலைமையாசிரியை சுமதி மற்றும் பள்ளியின் ஆசிரியைகள் உடனிருந்தனா்.

Advertisement