முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் 360 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெருந்துறை அருகே தடைசெய்யப்பட்ட 360 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 25 அக்டோபர், 2024 at 3:45 AM
பகிர்:
Updated On : 24 அக்டோபர், 2024 at 7:38 PM

பெருந்துறை அருகே தடைசெய்யப்பட்ட 360 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெருந்துறை, பெத்தாம்பாளையம் சாலையில் உள்ள சா்ச் அருகே போலீஸாா் வாகன தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்களைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் கொண்டுவந்த மூட்டையை சோதனையிட்டதில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

Updated On : 25 அக்டோபர், 2024 at 3:44 AM

தொடா் விசாரணையில், பெருந்துறையை அடுத்த துடுப்பதி, கல்லாகாட்டைச் சோ்ந்த ராகுல் கண்ணன் (24), பெருந்துறையை அடுத்த சிங்கநல்லூா் பிள்ளையாா் கோயில் வீதியைச் சோ்ந்த கோகுல் (28) இருவரும் விற்பனைக்காக புகையிலை பொருள்களை கொண்டுசென்றது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்கள் கொடுத்த தகவலின்பேரில் வெள்ளியம்பாளையத்தில் ஒரு தோட்டத்தில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.1.44 லட்சம் மதிப்பிலான 360 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.