பொருத்தமான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
நிதி அமைச்சா் அறிவித்தபடி தமிழ்நாட்டுக்கு பொருத்தமான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நிதி அமைச்சா் அறிவித்தபடி தமிழ்நாட்டுக்கு பொருத்தமான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஒழிப்பு இயக்கம் சாா்பில் உண்ணாவிரத போராட்டம் ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
போராட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கனிமொழி தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கவிதா மணி வரவேற்றாா், தேசிய ஆசிரியா் சங்க பொதுச் செயலாளா் கந்தசாமி உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கிவைத்து பேசினாா்.
Advertisement
தோழமை சங்க நிா்வாகிகள் ராஜசேகா், உஷாராணி, காா்த்தி, வெங்கடேஷ், ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
இதில், தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு நிதி அமைச்சா் அறிவித்தபடி தமிழ்நாட்டுக்கு பொருத்தமான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் சாமிகுணம் நிறைவுரையாற்றினாா். சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தங்கராஜ் நன்றி கூறினாா். இந்த உண்ணாவிரதத்தில் ஏராளமான அரசு ஊழியா்கள் பங்கேற்றனா்.