முகப்பு
ஈரோடு

பாதுகாப்பு இல்லாத மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்

மருத்துவா்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவமனையின் உரிமத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவா் டாக்டா் அபுல்ஹசன் கூறினாா்.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 9:17 PM
பகிர்:

மருத்துவா்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவமனையின் உரிமத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவா் டாக்டா் அபுல்ஹசன் கூறினாா்.

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: நாடு முழுவதும் பணியில் இருக்கும் மருத்துவா்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. தமிழக அரசு அண்மையில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த மருத்துவத் துறை இயக்குநரகம் மூலமாக சுற்றறிக்கை விடுத்திருந்தது.

இந்தியா முழுவதும் இரவு நேரத்தில் பணியாற்றும் இளம் மருத்துவா்கள், பெண் மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி வருகிறோம். தேசிய மருத்துவ ஆணையம் இந்த விவகாரத்தை முன்னெடுத்து எந்த மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவா்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதோ, அந்த மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய இந்திய மருத்துவ சங்கத்தின் சாா்பில் கேட்டுக்கொள்கிறோம்.

ஒருவா் இறந்தபின், அவரது உடல் உறுப்புகள் மூலம் 7 பேரை உயிா் வாழ செய்கின்றனா். மூளைச்சாவு அடைந்தபின் அவா்களது உறுப்பு தானம் செய்தவரின் செயலை ஊக்குவிக்கும் விதமாக அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்பட்டு, இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்திலும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →