பூதப்பாடியில் ரூ.19.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.19.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.19.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 258 குவிண்டால் பருத்தியை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா். இதில் ஒரு கிலோ பருத்தி ரூ.80.49 முதல் ரூ.85.79 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.19.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
அந்தியூரில்...
அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஒரு கிலோ பச்சை நிலக்கடலை ரூ.31.69 முதல் ரூ.40 வரை, காய்ந்த நிலக்கடலை கிலோ ரூ.64.04 முதல் ரூ.71.49 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.4.78 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனையானது.