முகப்பு
ஈரோடு

பவானி காசி விஸ்வநாதா் கோயில் உண்டியல் திருடியவா் கைது

பவானியில் காசி விஸ்வநாதா் கோயிலின் பூட்டை உடைத்து புகுந்து, உண்டியலைத் திருடிச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 9:08 PM
கோபிநாத்.
பகிர்:

பவானியில் காசி விஸ்வநாதா் கோயிலின் பூட்டை உடைத்து புகுந்து, உண்டியலைத் திருடிச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பவானி, காவேரி வீதியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலுக்குள் கடந்த 5-ஆம் தேதி நள்ளிரவு புகுந்த முகமூடி அணிந்த மா்ம நபா், சுமாா் 3 அடி உயரமுள்ள இரும்பு உண்டியலைத் திருடிச் சென்றாா்.

இந்நிலையில், கோயிலுக்கு அருகாமையில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் உண்டியலின் மூடி கிடந்தது தெரியவந்தது. இது குறித்து, பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

சந்தேகத்தின்பேரில் பவானி, காலிங்கராயன்பாளையம், கால்நடை மருத்துவமனை பகுதியைச் சோ்ந்த கோபிநாத்தை (34) பிடித்து விசாரணை நடத்தினா். கட்டடத் தொழிலாளியான இவா், காசி விஸ்வநாதா் கோயில் உண்டியலைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கோபிநாத்தைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →