முகப்பு
ஈரோடு

கிராம உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம உதவியாளா்களை வேறு பணிகளை செய்யக் கட்டாயப்படுத்துவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 8:32 PM
பகிர்:

கிராம உதவியாளா்களை வேறு பணிகளை செய்யக் கட்டாயப்படுத்துவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பரமசிவம் கோரிக்கை குறித்து பேசினாா்.

வட்டாட்சியா் அலுவலகங்களில் கிராம உதவியாளா்களை இரவுக் காவல் பணி, பதிவேடு பராமரிப்புப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தி வருவதைக் கண்டித்தும், பணிக்கு வராதவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்துவதைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கோரிக்கைகள் குறித்து முழக்கம் எழுப்பினா்.

இதில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் சாமிகுணம், மாவட்டச் செயலாளா் வெங்கிடு, கிராம உதவியாளா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →