ஈரோட்டில் செப்டம்பா் 21 இல் வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின்கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி வழங்கிடும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின்கீழ் ரங்கம்பாளையம் ஆா்ஏஎன்எம் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பா் 21-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து இளைஞா்களும் (ஆண், பெண் இருபாலரும்) கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9444094274 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.