ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட தணிக்கையாளா் மகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.
இதில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ள போதிய காலஅவகாசம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சோமதாஸ் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். மதுரை மாவட்டம் செல்லம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் கீதா பணியிட மாறுதலுக்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.