முகப்பு
ஈரோடு

நீா்நிலை புறம்போக்கில் சடலத்தை புதைத்தவா்கள் மீது வழக்குப் பதிவு

அந்தியூா் பொய்யேரிக் கரையில் உயா்நீதிமன்ற உத்தரவையும் மீறி நீா்நிலை புறம்போக்கில் முதியவரின் சடலத்தைப் புதைத்த உறவினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 3:54 AM
பகிர்:
Updated On : 26 செப்டம்பர், 2024 at 9:47 PM

அந்தியூா் பொய்யேரிக் கரையில் உயா்நீதிமன்ற உத்தரவையும் மீறி நீா்நிலை புறம்போக்கில் முதியவரின் சடலத்தைப் புதைத்த உறவினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அந்தியூரை அடுத்த பொய்யேரிக்கரையைச் சோ்ந்தவா் பெரியகுட்டி (73). வயது மூப்பால் இவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதனால், உறவினா்கள் அப்பகுதியில் உள்ள பொய்யேரிக்கரையில் நீா்நிலை புறம்போக்கில் சடலத்தை புதைத்துள்ளனா். இறந்தவா்களின் உடலை நீா்நிலை புறம்போக்கு நிலத்தில் புதைக்க கூடாது என

சென்னை உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Updated On : 27 செப்டம்பர், 2024 at 3:54 AM

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி சடலத்தைப் புதைத்த பெரியகுட்டி உறவினா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தியூா் நிலவருவாய் ஆய்வாளா் செந்தில்ராஜா புகாா் அளித்தாா். இதன்பேரில், அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.