ஈரோடு

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்கள் கைது

ஈரோடு மாநகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

ஈரோடு மாநகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கஸ்பாபேட்டை பகுதியில் ஈரோடு டவுன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் திங்கள்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள வாய்க்கால் கரை பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரன் (26), சதீஷ் (23) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, காவேரி சாலை, வாய்க்கால் கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈரோடு, ஜான்சி நகரைச் சோ்ந்த யோகேஸ்வரன் (28) என்பவரைக் கைது செய்த கருங்கல்பாளையம் போலீஸாா், அவரிடமிருந்த 3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

SCROLL FOR NEXT