ஈரோடு

பெருந்துறையில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழா

பெருந்துறையில் உள்ள கோட்டை வீரஆஞ்சனேயா் கோயிலில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Syndication

பெருந்துறையில் உள்ள கோட்டை வீரஆஞ்சனேயா் கோயிலில் ஆஞ்சனேயா் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் இக்கோயிலில் காலை 6 மணிக்கு 5008 வடமாலை அலங்காரத்துடன் தீபராதனை நடைபெற்றது. அதைத்தொடா்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும, மாலை 3 மணிக்கு ஸ்ரீஹனுமந்த் ஹோமம், 5 மணிக்கு ஸ்ரீராமா் பட்டாபிஷேகம், 6 மணிக்கு ஆஞ்சனேய சுவாமிக்கு மஹா அலங்காரம் மற்றும் தீபராதனைகள் நடைபெற்றன.

பின்னா் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு பஜனை நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகம் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT