முகப்பு
ஈரோடு

பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.39.54 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.39.54 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.

Updated On : 24 ஜனவரி, 2025 at 3:58 AM
பகிர்:
Updated On : 23 ஜனவரி, 2025 at 7:21 PM

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.39.54 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் புதன், சனிக்கிழமைகளில் கரும்புச் சா்க்கரை, வெல்லம் ஏலம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 90 டன் கரும்புச் சா்க்கரையை விற்பனைக்குக் கொண்டுவந்திருருந்தனா்.

Advertisement

இதில், 60 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.2,600 முதல் ரூ.2,740 வரை நிலை நிா்ணயிக்கப்பட்டது. இந்த ஏலத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் சாா்பில் பங்கேற்று ரூ.39.54 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரையை கொள்முதல் செய்ததாக விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.