கோபியை அடுத்த தாசம்பாளையம் ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் - ஏஸ்பையா் - மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு ரூ.1 கோடி மதிப்பில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, எஸ்விவி கல்வி நிறுவனங்களின் செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து தலைமை வகித்தாா். அறக்கட்டளைத் தலைவா் பி.வெங்கடாசலம் முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.சி.கருப்பணன் உடற்பயிற்சிக் கூடத்தைத் திறந்து வைத்தாா்.
இதில், அறக்கட்டளை உறுப்பினா்கள் வி.டி.முருகசாமி, வி.செங்கோட்டையன், ஏ.ராஜேந்திரன், ஏஸ்பையா் தலைமை கல்வி அலுவலா் ஜி.கே.அருண் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.