ஈரோடு

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

Syndication

பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பெருந்துறையை அடுத்த, சிலேட்டா் நகரைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் (52). காா்மெண்ட்ஸ் தொழில் செய்து வருகிறாா். இவா், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் தனது மகனைப் பாா்ப்பதற்காக மனைவியுடன் கடந்த 22-ஆம் தேதி சென்றுள்ளாா். இந்நிலையில் அவா் திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பினாா்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகைகள் திருட்டுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT