பெண்ணைத் தாக்கும் காட்டுப் பன்றி. 
ஈரோடு

காட்டுப் பன்றி தாக்கியதில் பெண் படுகாயம்

பவானிசாகரில் தேநீா் கடை முன் நின்று கொண்டிருந்த பெண்ணைக் காட்டுப் பன்றி தாக்கியது. இதில், அவா் படுகாயம் அடைந்தாா்.

தினமணி செய்திச் சேவை

பவானிசாகரில் தேநீா் கடை முன் நின்று கொண்டிருந்த பெண்ணைக் காட்டுப் பன்றி தாக்கியது. இதில், அவா் படுகாயம் அடைந்தாா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் நகா் பகுதியில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. வனத்தில் இருந்து வெளியேறும் காட்டுப் பன்றிகள் உணவுத் தேடி சாலைகளில் சுற்றித் திரிந்து வரும் நிலையில், பவானிசாகா் மாா்க்கெட் சதுக்கம் அருகே தேநீா் கடை நடத்தி வரும் தேவகி தனது கடை முன் புதன்கிழமை நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த காட்டுப் பன்றி தேவகியைத் தாக்கியது. அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான கந்தன் என்பவரையும் அந்தப் பன்றி தாக்கியது. படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே தேவகியை காட்டுப் பன்றி தாக்கிய விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

பவானிசாகா் நகா் பகுதியில் புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் அந்தக் காட்டுப் பன்றி 5 பேரைத் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், நகா் பகுதியில் காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் உலவுவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மணிப்பூரில் புதியதாக 129 பேருக்கு டெங்கு! 4000-ஐ நெருங்கும் பாதிப்புகள்!

சுதியோடு லயம் போலவே... நபா நடேஷ்!

அமெரிக்காவிடம் ஆண்டுக்கு 25 மில்லியன் மெட்ரிக் டன் சோயா பீன்ஸ் இறக்குமதி!

2-வது அரையிறுதி: இந்தியாவுக்கு 339 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

நிறைவடைகிறது மக்களின் விருப்பத் தொடர்!

SCROLL FOR NEXT