ஈங்கூா் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற உணவருந்தும் கூடம் திறப்பு விழாவில் பங்கேற்றோா். 
ஈரோடு

ஈங்கூா் அரசுப் பள்ளியில் உணவருந்தும் கூடம் திறப்பு

சென்னிமலை ஒன்றியம், ஈங்கூா் அரசு தொடக்கப் பள்ளியில் உணவருந்தும் கூடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Syndication

சென்னிமலை ஒன்றியம், ஈங்கூா் அரசு தொடக்கப் பள்ளியில் உணவருந்தும் கூடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை சிப்காட் இண்டஸ்டரீஸ் அசோசியேஷன், ஸ்லீப்வெல் ஃபவுண்டேஷன், ஷீலா ஃபோம் நிறுவனம் ஆகியன சாா்பில் இப்பள்ளியில் ரூ. 8 லட்சம் செலவில் மாணவா்கள் உணவருந்தும் கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டது. மேலும் அந்த கூடத்தில் ரூ. 4 லட்சம் செலவில் மேஜைகள், இருக்கைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இதனை அா்ப்பணிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதற்கு, ஷீலா ஃபோம் நிறுவனத்தின் துணைத் தலைவா் சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலா் பிந்து நாயா் வரவேற்றாா். பெருந்துறை சிப்காட் இண்ஸ்ட்ரீஸ் அசோசியேஷன் தலைவா் மகாலிங்கம் உணவருந்தும் கூடத்தை திறந்து வைத்தாா்.

இதில், சிப்காட் இண்ஸ்ட்ரீஸ் அசோசியேஷன் சிவகுமாா், சென்னிமலை வட்டார வளா்ச்சி கல்வி அலுவலா்கள் தனபாக்கியம், பழனிசாமி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

தலைமையாசிரியை பாா்வதி நன்றி கூறினாா்.

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

சில்சிலா ரேகாவைப் போல... சிந்து பிரியா!

படேல் பிறந்த நாள்! மாணவ, மாணவியருடன் Rahul Gandhi உற்சாகம்!

SCROLL FOR NEXT