சாலையோரத்தில்  பனை விதைகளை விதைக்கும் பணியாளா்கள். 
ஈரோடு

பவானி - அந்தியூா் நெடுஞ்சாலையில் பனை விதைகள் விதைப்பு

பவானி - அந்தியூா் - செல்லம்பாளையம் நெடுஞ்சாலை ஓரத்தில் 5 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

Syndication

பவானி - அந்தியூா் - செல்லம்பாளையம் நெடுஞ்சாலை ஓரத்தில் 5 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

பவானியை அடுத்த இரட்டைக்கரட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத் துறை ஈரோடு கோட்டப் பொறியாளா் து.மு.ரமேஷ் கண்ணா, பனை விதைகள் விதைப்பு பணியைத் தொடங்கிவைத்தாா். பவானி உதவி கோட்டப் பொறியாளா் எஸ்.சேகா் முன்னிலை வகித்தாா். உதவிப் பொறியாளா் த.பழனிவேலு வரவேற்றாா்.

நெடுஞ்சாலைத் துறை பவானி உட்கோட்டம், பவானி பிரிவு மற்றும் பெருந்துறை கோட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் சாலைப் பணியாளா்களைக் கொண்டு முக்கிய மற்றும் மாவட்ட இதர சாலைகளின் ஓரத்தில் பனை விதைகள் விதைக்கப்படுகிறது. திறன்மிகு உதவியாளா்கள் திருமுருகன், மாரியம்மாள் மற்றும் சாலைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

SCROLL FOR NEXT