முகப்பு
ஈரோடு

பவானியில் திமுகவின் வெற்றிக்கு ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்: தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்

=பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுகவின் வெற்றிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கேட்டுக் கொண்டாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 11:48 PM
திமுக வேட்பாளா் கே.ஏ.சேகரை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
பகிர்:

=பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுகவின் வெற்றிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கேட்டுக் கொண்டாா்.

பவானியை அடுத்த குருப்பநாயக்கன்பாளையத்தில் மதசாா்பற்ற கூட்டணி கட்சி நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கே.ஏ.சேகரை அறிமுகம் செய்து வைத்த ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பேசுகையில், கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு பல்வேறு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மக்களிடம் விளக்கிக் கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும்.

கூட்டணிக் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு பவானி தொகுதியில் அதிமுகவின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, திமுகவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றாா். இதில், திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.