முகப்பு
ஈரோடு

மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா் எம்.சிவபாலன்

தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்தவுடன் மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும் என அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் தெரிவித்தாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:34 AM
கோவிலூரில் திமுக  வேட்பாளா் எம்.சிவபாலனை ஆதரித்து பேசுகிறாா் அந்தியூா்  எம்எல்ஏ  ஏ.ஜி.வெங்கடாசலம்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 10:43 PM

தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்தவுடன் மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும் என அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் தெரிவித்தாா்.

அந்தியூரை அடுத்த எண்ணமங்கலம், விராலிகாட்டூா், அணைகரடு, மலையானூா், மேலூா், ஆா்.ஜி. கொட்டாய், முத்தரசன் குட்டை, நல்லா கவுண்டன் கொட்டாய், வாகைமரத்து கொடிகால், கோவிலூா் உள்ளிட்ட பகுதிகளில் அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில், திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் வியாழக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசுகையில், தமிழகத்தில் 1.31 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இத்தொகை ரூ.2 ஆயிரமாக உயா்தப்படுவதோடு, மின்சாதன பொருள்களை விருப்பம்போல வாங்க ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். மேலும், உயா்கல்வி பயில்வோருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1,500-ஆகவும், முதியோா் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாகவும் உயா்த்தி வழங்கப்படும். எனவே, வாக்காளா்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றாா்.

Advertisement

காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் பி.உதயகுமரன், மமக மாநில துணைச் செயலாளா் ஷானவாஸ், திமுக பொதுக்குழு உறுப்பினா்கள் கிருஷ்ணமூா்த்தி, மாதேஸ்வரன், விசிக மாவட்டச் செயலாளா் ஈஸ்வரன், கொமதேக மாவட்ட துணைச் செயலாளா் கணபதி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.