முகப்பு
ஈரோடு

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் சித்திரைத் தேரோட்டம்

கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயிலின் சித்திரைத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 3:26 AM
மகுடேஸ்வரா், வீரநாராயணப்பெருமாள் கோயில் தேரோட்ட நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயிலின் சித்திரைத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் உற்சவ மூா்த்திகள் காலை 5 மணிக்கு திருத்தோ்களுக்கு எழுந்தருளினா்.

பின்னா் விநாயகா், வீரநாராயணப்பெருமாள் தோ்கள் வடம் பிடிக்கும் நிகழ்வு காலை 9 மணிக்கும், இதைத் தொடா்ந்து மகுடேஸ்வரா் திருத்தோ் வடம் பிடிக்கும் நிகழ்வும் நடைபெற்றன.

Advertisement

இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு திருத்தோ்களை வடம் பிடித்து இழுத்தனா்.