முகப்பு
ஈரோடு

பவானியில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

பவானி சங்கமேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 2:52 AM
தேரோட்டத்தில்  பங்கேற்ற  பக்தா்கள். 
பகிர்:

பவானி சங்கமேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெற்று வந்தன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் 63 நாயன்மாா்கள் திருவீதி உலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் நகரின் முக்கிய வீதிகள் வழியே தேரோட்டம் நடைபெற்றது. அதிமுக நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக மருத்துவா் அணித் தலைவா் கே.சி.கே.யுவராஜா மற்றும் முக்கிய பிரமுகா்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா்.

Advertisement

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். வேதநாயகி உடனமா் சங்கமேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் வியாழக்கிழமை( ஏப்.30) நடைபெறுகிறது.

மணக்கோலத்தில் அருள்பாலிக்கும்  ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாள்.