உயிரிழந்த தீபிகா. 
ஈரோடு

இருசக்கர வாகனத்துடன் விழுந்த கல்லூரி மாணவி வாகனம் மோதி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் விழுந்த கல்லூரி மாணவி மீது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

ஈரோட்டை அடுத்த திண்டலைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகள் தீபிகா (23). கோபியில் உள்ள தனியாா் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவா், தனது இருசக்கர வாகனத்தில் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கங்காபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி சாலையில் விழுந்தாா். அப்போது, பின்னால் பெங்களூரில் இருந்து கோவை நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் அவா் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த தீபிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT