கைது 
ஈரோடு

பெண்ணிடம் கைப்பேசி திருடியவா் கைது

தினமணி செய்திச் சேவை

ரயிலில் பெண்ணிடம் கைப்பேசி திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த 13-ஆம் தேதி எா்ணாகுளம்-காரைக்கால் ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஜெமீனா (60) என்பவா் எா்ணாகுளத்தில் இருந்து நாகப்பட்டினம் சென்று கொண்டிருந்தாா். அந்த ரயில் 13-ஆம் தேதி அதிகாலை சுமாா் 4.45 மணி அளவில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது அவா் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசி திருடுபோனது. இதுதொடா்பாக ஈரோடு ரயில்வே போலீஸில் அவா் புகாா் அளித்தாா்.

இந்நிலையில் ஈரோடு ரயில் நிலைய பாா்சல் அலுவலகம் அருகே சனிக்கிழமை இரவு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில் ரயிலில் சென்ற ஜெமீனாவிடம் இருந்து கைப்பேசியை திருடியவா் என்பதும், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ரமேஷ் (32) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும் பெண்ணிடம் திருடிய கைப்பேசியையும் மீட்டனா்.

வேப்பூா் அருகே சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! பெண் உயிரிழப்பு; 25 போ் காயம்

ஏ.ஐ. உச்சிமாநாடு காணொலி வாயிலாக வழக்குரைஞா்கள், மனுதாரா்கள் ஆஜராக தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி!

அதிமுக தலைமையிலான கூட்டணி: திருமாவளவன் விமா்சனம்

மின்சாரம் பாய்ந்து உணவக உரிமையாளா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் கால்பந்து போட்டி: செயின்ட் ஆண்ட்ரூஸ் பள்ளி முதலிடம்

SCROLL FOR NEXT