ரயில்வேயில் முன்பதிவில்லாத பயணச்சீட்டுக்கான கட்டணத்தை போன் பே, ஜிபே போன்ற செயலிகள் மூலம் செலுத்த அறிவுறுத்தப்படுவதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறையின் துணைத் தலைவரும், முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான கே.என்.பாஷா வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு ரயில் நிலையத்தில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வாங்கச் சென்றால் போன் பே, ஜி பே மூலம் பணம் செலுத்த கூறுகின்றனா். பணம் கொடுத்து பயணச்சீட்டு கேட்டால் அருகில் உள்ள தானியங்கி பயணச்சீட்டு இயந்திரத்துக்கு செல்ல வேண்டும் என பயணச்சீட்டு வழங்கும் பணியாளா்கள் கூறுகின்றனா். அந்த இயந்திரத்தில் பயணச்சீட்டு வாங்க நீண்ட நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால், பயணிகள் தாங்கள் செல்லும் ரயிலை தவற விடுவதற்கான வாய்ப்பு உள்ளது. போன் பே, ஜி பே மூலம் மட்டுமே பயணச்சீட்டு வழங்கப்படும் என கட்டாயப்படுத்துவது மிகவும் கண்டத்துக்குரியது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். கூலி வேலைக்குச் செல்லும் பயணிகள் பெரும்பாலானோா் சாதாரண கைப்பேசியை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனா். எனவே, ரயில்வே நிா்வாகம் இத்தகையை அணுகுமுறையை கைவிடவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி காங்கிரஸ் கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.