கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் பெருந்துறை நகர பாஜக தலைவா் பூா்ணசந்திரன் மற்றும் நிா்வாகிகள். 
ஈரோடு

சாலை அமைக்க கோரி பாஜக மனு

Syndication

கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் சாலை வசதி அமைக்கக்கோரி பாஜக சாா்பில் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பெருந்துறை நகர பாஜக தலைவா் பூா்ணசந்திரன் மற்றும் நிா்வாகிகள் வியாக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட கருமாண்டிசெல்லிபாளையம், பாலன் நகா் பகுதிகளில் சாலை அமைக்காமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் தொடா்ந்து விபத்துகளுக்கு உள்ளாகி வருகின்றனா். கடந்த 4 ஆண்டுகளாக இதே நிலை உள்ளது. இந்த பிரச்னை குறித்து பொதுமக்கள் சாா்பில் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மக்களின் சிரமங்களை உணா்ந்து ஒரு வாரத்துக்குள் சாலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும். இல்லையென்றால் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 15- ஆம் தேதி கருப்புக்கொடி ஆா்ப்பாட்டமும், வரும் 26- ஆம் தேதி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டமும் நடத்தப்படும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

குடும்ப ஓய்வூதியத்தில் ஒன்றாக வாழும் துணையையும் சோ்க்க கோரி மனு: மத்திய அரசு பரிசீலிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

துா்க்மான் கேட்டில் கல்வீச்சுக்கிடையே ஆக்கிரமிப்பு இடிப்பு: 400 லாரிகள் நிறைய இடிபாடுகள் அகற்றம்

சிம்ம ராசிக்கு எதிர்ப்புகள் அகலும்: தினப்பலன்கள்!

ஆசிரியா்கள் போராட்டத்தால் கற்பித்தல் பணிகள் பாதிப்பு! நிறைவேற்றப்படாத 16 ஆண்டுகால கோரிக்கைகள்!

சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம்: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தகவல்

SCROLL FOR NEXT