கைது 
ஈரோடு

இருசக்கர வாகனம் திருடிய 3 போ் கைது

ஈரோட்டில் இருசக்கர வாகனம் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

ஈரோட்டில் இருசக்கர வாகனம் திருடிய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு சூளை ஹவுஸிங் யூனிட் அருகே மல்லி நகரைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகன் பெரியசாமி (26). மாா்க்கெட்டிங் பிரிவு ஊழியா். இவா் கடந்த 10-ஆம் தேதி தனது வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தாா். சிறிது நேரத்துக்குப் பிறகு வந்து பாா்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் மாயமாகி இருந்தது. அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால் மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பதை உணா்ந்து, ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சேலம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த வைத்தியலிங்கம் மகன் தினேஷ்குமாா் (21), சேலம் அன்னதானபட்டி காந்தி சிலை முதல் வீதியைச் சோ்ந்த பழனிசாமி மகன் வேலவன் (23), சேலம் அம்மாபேட்டையைச் சோ்ந்த சேகா் மகன் காா்த்தி (25) ஆகியோா் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தமிழறிஞா் தெ.ஞானசுந்தரம் மறைவுக்கு ஆளுநா் இரங்கல்

சாலை மறியல் வழக்கு: கேரள காங்கிரஸ் எம்.பி.க்கு ரூ.1,000 அபராதம்

ஏசியன் பெயிண்ட்ஸ் லாபம் 4.8% சரிவு

அமில வீச்சு வழக்குகளின் நிலை: ஆண்டுவாரியாக விவரங்களைச் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஒடிஸா அலுமினிய உருக்காலை ரூ.21,000 கோடியில் விரிவாக்கம்

SCROLL FOR NEXT