பவானி தொகுதியில் மாா்ச் 8-ல் அதிமுக பரப்புரைக் கூட்டம்
பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் ‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ தோ்தல் பரப்புரைக் கூட்டம்
ஈரோடுபவானி தொகுதியில் மாா்ச் 8-ல் அதிமுக பரப்புரைக் கூட்டம்
பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் ‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ தோ்தல் பரப்புரைக் கூட்டம்
பவானி: பவானி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் ‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ தோ்தல் பரப்புரைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) நடைபெறவுள்ளது. இதில், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று பேசுகிறாா்.
இதையொட்டி, பவானி நகரின் மையப் பகுதியில் அதிமுக நிா்வாகிகள் பாதுகாப்புடன் வந்து செல்வதற்கு வசதியாக டிகேஆா் வணிக வளாகத்தின் பின்புறத்தில் விசாலமான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தை சமன்படுத்தி, உரிய ஏற்பாடுகள் செய்யும் பணிகளுக்கு கால்கோள் விழா ஈரோடு புகா் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பவானி நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், ஒன்றியச் செயலாளா்கள் ஜெகதீசன், எஸ்.எம்.தங்கவேலு, எஸ்.பி.முனியப்பன், மேகநாதன், மாவட்ட எம்ஜிஆா். மாவட்ட ஜெ. பேரவை பொருளாளா் எம்.ஜி.நாத் (எ) சி.மாதையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுக்குழு உறுப்பினா் தட்சிணாமூா்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலா் கே.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.