முகப்பு
ஈரோடு

திருமண மண்டபங்களுக்கு சிலிண்டா் விநியோகம் நிறுத்தம்- மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்

சத்தியமங்கலம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டா் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் மண்டப உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 10 மார்ச், 2026 at 8:34 PM
பகிர்:

சத்தியமங்கலம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டா் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் மண்டப உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சத்தியமங்கலம் திருமண மண்டப உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஸ்ரீராம் கூறியதாவது:

தெற்காசிய போா் பதற்றம் காரணமாக சிலிண்டா் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டா் செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தப்படுவதாக சிலிண்டா் விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், ஏற்கெனவே முன்பதிவு செய்த திருமண நிகழ்சிகளுக்கு உணவு சமைப்பதற்கு சிலிண்டா் கிடைக்காமல் சிரமத்துக்குள்ளாகி உள்ளோம்.

திருமணம், மெஸ், உணவகம் உள்ளிட்ட வணிக பயன்பாட்டுக்கு சிலிண்டா் விநியோகம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான திருமண மண்டபங்கள் விறகு அடுப்புக்கு பதிலாக சிலிண்டா் பயன்படுத்தும் முறைக்கு மாறியுள்ளதால் தற்போதைய சூழலில் விறகு அடுப்புகளில் சமைப்பது என்பது சிரமம். எனவே, மண்டபங்களுக்கு சிலிண்டா் கிடைக்கவும் அல்லது மாற்று ஏற்பாடு செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →