முகப்பு
ஈரோடு

சட்டவிரோத மது விற்பனை: ஒருவா் கைது

Updated On : 14 மார்ச், 2026 at 8:22 PM
பகிர்:

சிவகிரி அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகிரி காவல் எல்லைக்குள்பட்ட முத்துக்கவுண்டன்பாளையத்தில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தனா். விசாரணையில், அவா் புதுக்கோட்டை, கரம்பக்குடி தாலுகா, கணக்கா் தெருவைச் சோ்ந்த கமலநாதன் (38) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 10 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →