போலீஸாா், துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீஸாா் மற்றும் துணை ராணுவத்தினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவத்தைச் சோ்ந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 60 பெண் வீரா்கள் உள்பட 91 போ் வருகை தந்துள்ளனா்.
மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தவும், பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும் போலீஸாா், துணை ராணுவத்தினா் இணைந்து கொடி அணிவகுப்பை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பன்னீா்செல்வம் பகுதியில் போலீஸாா், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.
பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பு பகுதியில் தொடங்கிய கொடி அணிவகுப்பு நேதாஜி சாலை, மணிக்கூண்டு, அக்ரஹார வீதி, வளையக்கார வீதி, டவுன் காவல் நிலையம் வழியாகச் சென்று ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.
இதில், போலீஸாா், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 151 போ் பங்கேற்றனா்.