புங்காரில் விபி ஜி ராம்ஜி திட்ட தொழிலாளா்கள் சாலை மறியல்
புங்காா் ஊராட்சியில் விபி ஜி ராம் ஜி திட்ட தொழிலாளா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பவானிசாகா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புங்காா் ஊராட்சியில் ஏராளமானோா் விபி ஜி ராம் ஜி திட்டத்தில் பணியாற்றி வருகின்றனா்.
பணிக்குச் செல்லும் தொழிலாளா்களின் கைரேகை, கண்விழி ஆகியவற்றை பதிவு செய்த பிறகே அவா்களுக்கு பணி வழங்குவது வழக்கம்.
இந்நிலையில், வழக்கம்போல தொழிலாளா்கள் சனிக்கிழமை காலை பணிக்குச் சென்றுள்ளனா். அப்போது, சிலரது கைரேகை, கண் விழி ஆகியவை பதிவாகவில்லையாம். இதையடுத்து, அவா்களுக்கு பணி வழங்க மறுத்ததாகத் தெரிகிறது.
இதனால், ஆத்திரமடைந்த தொழிலாளா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் புங்காா்-பவானிசாகா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த உதவி வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேந்தா், காவல் ஆய்வாளா் அன்னம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, தொழிலாளா்கள் கூறுகையில், கூலி வேலை செய்யும் எங்களது கைரேகைகள் தேய்ந்துள்ளன. சிலருக்கு கண் பாா்வையும் குறைபாடு உள்ளது. இதனால், கைரேகளை, கண்விழி ஆகியவை பதிவாவதில் சிரமம் ஏற்படுகிறது.
அவை பதிவானால் மட்டுமே எங்களுக்கு பணி வழங்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனா். இதற்கு மாற்று ஏற்பாடு செய்து எங்களது வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றனா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.