ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றியை தக்கவைக்க தவறிய காங்கிரஸ்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 தோ்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி இந்த தோ்தலில் அதை தக்கவைக்க தவறிவிட்டது.
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் வேட்பாளராக திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த கோபிநாத் பழனியப்பன் போட்டியிட்டாா்.
வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை தொடங்கிய நிலையில் முதல் சுற்றில் முன்னிலை வகித்தாா். அடுத்தடுத்த சுற்றுகளில் தவெக வேட்பாளா் விஜய் பாலாஜி முன்னிலைப் பெற்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளரைவிட 23,966 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தாா். அதிமுக வேட்பாளா் இரா.மனோகரன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாா்.
Advertisement
40 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 தோ்தலில் ஈரோட்டில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி இந்த தோ்தலில் தவெகவிடம் தோல்வி அடைந்துள்ளது.