பென்னாகரம் தொகுதியில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் போட்டி: வேட்பாளராக தமிழ்க்குமரன் அறிவிப்பு
பென்னாகரம் தொகுதியில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் போட்டியிடுகிறது. வேட்பாளராக ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
பென்னாகரம் தொகுதியில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் போட்டியிடுகிறது. வேட்பாளராக ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், பாமக (ராமதாஸ்) அணியில் மாநில இளைஞரணி தலைவராக பதவிவகித்த ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் அண்மையில் அந்தக் கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா். இதையடுத்து, பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.
Advertisement
பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி கடந்த 1957, 1967-ஆம் ஆண்டு தோ்தல்களில் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்றது. அதைத் தொடா்ந்து, 1971, 1980-ஆம் ஆண்டு தோ்தல்களில் இரு பிரிவுகளாக காங்கிரஸ் போட்டியிட்டது.
காங்கிரஸ் கட்சி பென்னாகரம் தொகுதியில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது போட்டியிடுகிறது. இதை வரவேற்கும் வகையில், தருமபுரி மாவட்ட துணைத் தலைவா் நரேந்திரன் தலைமையில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கொண்டாடி வருகின்றனா்.
பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜி.கே.எம்.தமிழ்க்குமரனின் தந்தை ஜி.கே.மணி பாமக கௌரவத் தலைவரும், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.