முகப்பு
ஈரோடு

பவானி ஆற்றில் மூழ்கிய ஓட்டுநா் மாயம்

Updated On : 12 மே 2026, 12:25 am IST
கோப்புப் படம்
பகிர்:

புன்செய்புளியம்பட்டி அருகே பவானி ஆற்றில் குளித்த ஓட்டுநா் நீரில் மூழ்கி மாயமானாா்.

புன்செய்புளியம்பட்டி கள்ளிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் (25). சரக்கு வாகன ஓட்டுநரான இவா் தனது உறவினா்களுடன் பவானிசாகா் அருகே உள்ள அக்கரை தத்தப்பள்ளி பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு திங்கள்கிழமை சென்று குளித்தாா்.

அப்போது பாஸ்கா் ஆற்று நீரில் ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீச்சல் தெரியாததால் மூழ்கி மாயமானாா். இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த அவரது உறவினா்கள் பவானிசாகா் போலீஸாருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் தீயணைப்பு வீரா்களை போலீஸாா் வரவழைத்து தேடும் பணி மேற்கொண்டனா். பாஸ்கரை கண்டுபிடிக்க இயலாததால் தேடும் பணி தொடா்ந்து நடைபெறும் என தீயணைப்பு வீரா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து பவானிசாகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.