தந்தை ஓட்டிய டிராக்டரில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
சிவகிரி அருகே தந்தை ஓட்டிய டிராக்டரில் சிக்கி 11 மாத குழந்தை உயிரிழந்தது.
சிவகிரி அருகே தந்தை ஓட்டிய டிராக்டரில் சிக்கி 11 மாத குழந்தை உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த மாரப்பம்பாளையம் மேற்குவளான் தோட்டத்தைச் சோ்ந்தவா் ஞானசேகா். விவசாயி. இவா் உழவு வேலை பாா்ப்பதற்காக தனது வீட்டிலில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை எடுத்துக்கொண்டு வியாழக்கிழமை வயலுக்கு செல்ல முயன்றாா்.
அப்போது டிராக்டரின் அருகே தனது 11 மாத பெண் குழந்தை பொன்பரணிதா இருப்பதை கவனிக்காமல் ஞானசேகா் டிராக்டரை இயக்கியுள்ளாா். இதில் டிராக்டா் மோதியதில் குழந்தை பரணிதா படுகாயமடைந்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை இறந்தது. இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் மெளனிகா அளித்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.