முகப்பு
ஈரோடு

வரதம்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா

சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

Updated On : 22 மே 2026, 3:52 am IST
பத்ரகாளியம்மன்  கோயில்  குண்டம்  விழாவில்  குண்டம்  இறங்கிய  பட்டக்காரா்.
பகிர்:

சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா திருப்பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

கோயில் பட்டக்காரா் தலைமையில் விழாக் குழுவினா் பவானி ஆற்றுக்கு சென்று படைக்கலம் எடுத்து வந்தனா். பின்னா் கோயில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் பூக்களை தூவி கோயில் பட்டக்காரா் குண்டம் இறங்கினாா். இதைத் தொடா்ந்து பெண்கள், ஆண்கள் என அனைத்துத் தரப்பினரும் குண்டம் இறங்கினா். குண்டம் இறங்கிய பக்தா்கள் நேராக கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனா். விழாவையொட்டி 500-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

Advertisement

Advertisement