கூடலூர் அருகே சடலத்துடன் பழங்குடியின மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூரை அடுத்துள்ள சிறிமதுரை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாதன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது சடலத்தை கிராம மக்கள் மயானத்துக்குக் கொண்டுசெல்லும்போது, வழியில் தனது நிலத்தின் வழியாகச் சடலத்தைக் கொண்டு செல்லக் கூடாது என வாசு என்பவர் தடுத்துள்ளார். இதனால், சடலத்தைக் கொண்டு சென்றவர்களுக்கும், வாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கலைகலப்பு ஏற்பட்டது.
சடலத்தை அதே இடத்தில் வைத்து பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்குச் சென்ற கூடலூர் டி.எஸ்.பி. ரவிசங்கர், ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.