நீலகிரி

தெருநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

DIN

கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு, பாரதிநகர், அம்பேத்கர் நகர், காந்தி நகர், சக்தி நகர், கோவில்மேடு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. சமீபகாலமாக பள்ளி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்களை இந்த நாய்கள் தொடர்ந்து கடித்து வருவதால் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
 எனவே, கிராமங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடிக்க ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

SCROLL FOR NEXT