நீலகிரி

கூடலூர் - ஓவேலி சாலையில் நிலச்சரிவு: வீட்டின் சுற்றுச்சுவர் மண்ணில் புதைந்தது

DIN


கூடலூர் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு ஓவேலி சாலையில் வீட்டின் சுற்றுச்சுவர் மண்ணில் புதைந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
வெள்ளிக்கிழமை இரவு சுமார் 12 மணியளவில் பெய்த மழையில் கூடலூர்-ஓவேலி சாலையில் கெவிப்பாறா லாக்லாண்ட் பகுதியில் உள்ள ஜெயா என்பவரது வீட்டின் சுற்றுச்சுவர் முற்றிலும் மண்ணில் புதைந்துள்ளது.
தொடர்ந்து கன மழை பெய்வதால் மேலும் பாதிப்புகள் ஏற்படலாம் என மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT