தனியார் வாகனங்களை வாடகைக்கு ஓட்டுவதை தடுக்க வலியுறுத்தி ஆட்சியருக்கு மனு
கூடலூர் பகுதியில் தனியார் வாகனங்களை முறைகேடாக வாடகைக்கு இயக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
கூடலூர் பகுதியில் தனியார் வாகனங்களை முறைகேடாக வாடகைக்கு இயக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு விவரம்:
கூடலூர் பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலா வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் குறைந்த வாடகைக்கும், தின வாடகைக்கும் இயக்கி வருகின்றனர். இப்பணியில் 400-க்கும் மேற்பட்ட தனியார் வாகன ஓட்டுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் இதுவரை பலனில்லை. உறுதியான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. இதைத் தடுக்க தனியாகப் பறக்கும் படை அமைத்து கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் தங்களது உரிமத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து தனியார் வாகனங்களாக மாற்ற முடிவெடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.