முகப்பு
நீலகிரி

உதகையில் மக்கள் குறைதீர் நாள்: 189 மனுக்கள் மீது தீர்வு காண உத்தரவு

உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 189 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெற்றார்.

Updated On : 4 செப்டம்பர், 2018 at 1:14 AM
பகிர்:

உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 189 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெற்றார்.
உதகையில்  நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 189 மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்சியர்  உத்தரவிட்டார். 
கடந்த குறைதீர் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீதும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  உத்தரவிட்டார்.
இந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் முருகன், அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.