கூடலூரில் ஊட்டச் சத்து மாத விழா
கூடலூரை அடுத்துள்ள கல்லிங்கரை பகுதியில் திங்கள்கிழமை ஊட்டச் சத்து மாத விழா நடைபெற்றது.
கூடலூரை அடுத்துள்ள கல்லிங்கரை பகுதியில் திங்கள்கிழமை ஊட்டச் சத்து மாத விழா நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் நடைபெற்ற ஊட்டச் சத்து மாத விழாவுக்கு மாவட்ட திட்ட அலுவலர் ஈவ்லிங்ஸ்மைல் தலைமையேற்றார். அவர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.
குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளை அலுவலர் வசந்தா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். முன்னாள் கவுன்சிலர்அனீஃபா, மேற்பார்வையாளர்கள் லட்சுமி, ரஹமத், வளர்மதி ஆகியோர் ஊட்டச் சத்தின் அவசியம் குறித்து விளக்கமளித்தனர்.
ஊட்டச் சத்து குறித்த பொருட்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராம செவிலியர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் வளரிளம் பெண்கள், குழந்தைகள், ஊர் மக்கள் கலந்துகொண்டனர். மேற்பார்வையாளர் சிக்கம்மா வரவேற்றார். சாந்தி நன்றி கூறினார்.