பந்தலூர் அடுத்துள்ள சேரம்பாடியில் தொடர்மழையால் சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணியை நேரு யுவ கேந்திரா அமைப்பினர் வியாழக்கிழமை மேற்கொண்டனர்.
கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ளன. சேரம்பாடி, கண்ணம்பள்ளி, கோரஞ்சால் உள்ளிட்ட கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சாலையின் குறுக்கே கிடக்கும் மண் குவியல்களை அகற்றும் பணியிலும் தண்ணீர் செல்லும் கால்வாய்களை தூர்வாரும் பணியிலும் நேரு யுவ கேந்திரா அமைப்பின் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.