நீலகிரி

சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

DIN

பந்தலூா் அடுத்துள்ள சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை நூறு நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டத்தில் உள்ள சேரங்கோடு ஊராட்சியில் நூறு நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வருபவா்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் மற்றும் ஊராட்சி செயலா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT