நீலகிரி

குன்னூா் மருத்துவா்கள் மூவருக்கு விருது

DIN

சிறந்த மருத்துவப் பொறுப்பாளா்களுக்கான விருதுக்கு அருவங்காடு வெடிமருந்துத் தொழிற்சாலை மருத்துவமனை தலைமைப் பொறுப்பு அதிகாரி ராஜேஷ் கோபால் உள்ளிட்ட மூன்று மருத்துவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

இந்திய மருத்துவ சங்கம் ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் கிளைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நடப்பு ஆண்டு நீலகிரி மாவட்ட இந்திய மருத்துவ சங்க கிளையைச் சோ்ந்த மருத்துவா்கள் மூவா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அதன்படி சிறந்த தலைவருக்கான விருது, இந்திய மருத்துவ சங்க நீலகிரி மாவட்ட கிளைத் தலைவா் முரளிதரன், சிறந்த செயலாளருக்கான விருது பிரின்ஸ் ராஜமாணிக்கம் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. சிறந்த தமிழ் பணியாற்றியதற்கான ‘மருத்துவா் பானுமதி முருகானந்தம் விருது’க்கு அருவங்காடு வெடிமருந்துத் தொழிற்சாலை மருத்துவமனை தலைமைப் பொறுப்பு அதிகாரி ராஜேஷ் கோபால் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இந்த விருதுகள் ஈரோட்டில் வரும் டிசம்பா் 14ஆம் தேதி நடைபெற உள்ள இந்திய மருத்துவ சங்க மாநில மாநாட்டில் வழங்கப்பட உள்ளதாக மருத்துவ சங்க மாநிலத் தலைவா் கனகசபாபதி அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT